நபி பற்றி இந்திய வேதங்களில் முன்னறிவிப்பு

உண்மை :

முஹம்மது(ஸல்) அவர்களின் உண்மைக்கு இரண்டு வகையான சாட்சியங்கள்.


நீர் நபியல்ல என்று நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர். உங்களுக்கும் எனக்கும் இடையில்(நான் நபியென்பதற்;கு) அல்லாஹ்வும் (முன்னுள்ள) வேதங்களை அறிந்தோரும்
சாட்சியாக உள்ளனர் என்று நபியே அவர்களிடம் நீர் கூறுவீராக. (திரு மறை குர்ஆன் 13:43)

பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஒரு முறையான அரசாங்கம் தேவை என்ற அளவிற்கு ஒரு சமூகம் வளர்ச்சியடையாத வரை அங்கே சட்டங்களுக்கோ அல்லது நியமங்களுக்கோ எந்தவித முறையான உருவமும் கொடுக்கப்படுவதில்லை. அது போலவே நபித்துவ வாதம் செய்பவரின் உண்மையை நிரூபிக்கும் அடையாளங்களும் மக்களின் மனோ வளர்ச்சியை பொறுத்து காலத்திற்குகாலம் மாறுபட்டு வந்திருக்கிறது.முற்காலங்களில் மனிதர்கள் தங்களின் உண்மையை நிரூபிப்பதற்காக பலவிதமான வழிகளை கையாண்டனர்: உதாரணமாக, சத்தியம் செய்தல், நெருப்பை கையிலேந்துதல் அல்லது அதனுள் குதித்தல், நீர் சுழற்சியை ஆபத்தின்றி கடத்தல், மலையிலிருந்து குதித்து எந்தவித ஆபத்துமில்லாமல் வருதல், குறி சொல்லுதல், மந்திரவசியம் செய்தல் மற்றும் சித்து வேலைகள் செய்தல் போன்றவைகளாகும். உண்மையைத் தேடுபவரோ, குருட்டாம் போக்கில்,சிந்தனையின்றி நம்பும் நிலையிலேயே இருந்தார் எனலாம்.நபித்துவ வாதத்தை உண்மைப்படுத்துவதற்கு வேறு ஆழமான சிந்தனை எதுவும் தேவையாயிருந்திருக்கவில்லை. இந்து மதத்திலும் அது போன்ற மற்ற புராதான மதங்களிலும் புனிதர்கள் எனும் வாதம் இது போன்ற பரீட்சைகளாலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.ஆனால் திருமறை குர்ஆனோ நபி முஹம்மது(ஸல்) அவர்களின் நபித்துவ வாதத்தை நிரூபிப்பதற்காக இது போன்ற அற்புதங்களை ஆதாரங்களாக முன் வைக்கவில்லை. முழுமையான சட்ட திட்டங்களை கொண்டதொரு சமூகம் வளர்ச்சியடைந்த சமூகம் என்றால், நபி(ஸல்) அவர்களின் நபித்துவ உண்மைக்கு(மேற் கண்ட வசனத்தில்) திருமறை குர்ஆன் முன் வைத்துள்ள அடிப்படை மிகவும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மேலே குறிப்பிடப்பட்ட வசனத்தில் நபி(ஸல்) அவர்களின் நபித்துவ வாதத்தை நிரூபிப்பதற்காக இரண்டு வகையான சாட்சியங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு சாட்சியங்களும் அவரின் உண்மையை நிரூபிப்பதற்கு போதுமானவைகளாக கருதப்பட்டுள்ளன. அவைகள் எல்லாம் வல்ல இறைவனின் சாட்சியமும் வேதங்களை அறிந்தோரின் சாட்சியமுமேயாகும். வேதங்கள் என்பது முன்னுள்ள வேதங்களையே குறிக்கும்.

தடவியல் சட்டத்தில் இரண்டு காரணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை: சாட்சி கூறுபவரின் முக்கியத்துவமும் அவர் கூறும் சாட்சியின் பொருத்தமான, உறுதியான தன்மை ஆகியவைகளுமாகும். நபி(ஸல்) அவர்களைப் பொறுத்த வரை எல்லாம் வல்ல இறைவனே அவருக்காக சாட்சி கூறுவதால் சாட்சியின் மகத்துவம் தெளிவாக அறிந்து கொள்ளப்படக் கூடியது.

இறைவனின் சாட்சி

இறைவனின் சாட்சி என்பதானது, இயற்கை புத்தக(வேத)த்தின் சாட்சி, மனித சக்திக்கு அப்பாற்பட்ட வான்சக்தி ஜ1ஸ மற்றும் இறை அத்தாட்சிகள் போன்றவைகள் என்றே புரிந்து கொள்ளப்படுகின்றது. இவைகள்தான் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதற்கான அடையாளத்தை எப்பொழுதும் கொடுத்து வருவதாகும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் ஆளப்படுகின்றது என்பது நமக்கு தெரியும். மிகச்சிறிய அணு முதல் மிகப் பெரும் நட்சத்திரம் வரையிலான படைப்புக்களில் எதுவும் சட்டத்தின் அடிப்படை எதுவும் இல்லாமல் இயங்குவதாக தோன்றவில்லை.

ஒவ்வொன்றையும் படைத்து அவைகளை (அவைகளின் இலக்கை நோக்கி) வழி காட்டியவனே நம்முடைய ரப்பு. (திருக்குர்ஆன் 20:50)


இறைச் சட்டத்தின் இந்த எல்லாம் தழுவிய தன்மை நபி(ஸல்) அவர்களின் நபித்துவ வாதத்திற்கு மிகவும் வலுவான ஆதாரமாகும்; தெய்வீக செய்தி வெளிப்பாட்டின் உலகளாவிய தன்மையை நிரூபிப்பதற்காக இந்த வாதத்தை முதன் முதலில் முன் வைத்தவர் நபிமார்களில் அவரேயாவார்.

அதாவது இயற்கை புத்தகத்திலுள்ள ஒவ்வொரு இலையும் படைப்பின் ஒவ்வொரு அணுவும் எல்லாம் வல்ல இறைவன் அவற்றிற்களித்திருக்கும் சட்டத்தின் பால் தேவையாயிருக்கிறது என்பதாகும். எல்லா ஞானமும் மிக்க இறைவன், அகில உலகங்களின் ரப்பு, மிகச் சிறிய அணுவிற்குக் கூட ஒரு சட்டஒழுங்கு முறையை அளித்திருந்தான் எனில், தன் முன் ஏராளமான முன்னேற்ற தளங்களை கொண்டிருக்கும் இறைவனின் மிகச் சிறந்த படைப்பான மனிதனுக்கு தன்னை சரியான முறையில் நடத்திக் கொள்வதற்கும் தன்னுடைய முன்னேற்ற வளர்ச்சிக்கும் இறைவனின் வழிகாட்டுதலும் ஒளியும் கட்டாயம் தேவை. எல்லாம் வல்ல இறைவன் திருமறை குர்ஆனில் கூறுவதாவது: ஷபடைத்து, முழுமைப்படுத்தி, குறிப்பிட்ட அளவுப்படியாக்கி அவைகளை (அவைகளின் இலட்சியத்தை நோக்கி) வழிகாட்டும் மேன்மையான இறைவனை துதிப்பீராக. திருமறை குர்ஆன் (87:1-3.)

இறைச்செய்தி வெளிப்பாட்டிற்கு மானிட வரையறைகளை இடுவது அல்லது ஏதேனும் ஒரு காலம் அல்லது குறிப்பிட்ட மக்கள் ஆகியோருடன் அது நின்று விடுகின்றது என்று கூறுவதெல்லாம் கருணையாளனான அந்த இறைவனின் பண்புகளான இரக்கம் அன்பு ஆகியவற்றை மறுக்கிறது என்பது மாத்திரமல்லாமல் மதத்தின் தேவையையும் அடிப்படையையும் மிகவும் சிறுமைப்படுத்தி விடுகின்றது. அது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கண்டிப்பாக போதிக்கப்பட வேண்டிய தவிர்க்க முடியாத தேவை அல்லது அது காலத்தால் சீர்கெடுக்கப்பட்டால் அது ஒரு புதிய நபியால் புத்துயிரூட்டப்பட்டு மனித வாழ்வின் இயக்க சக்தியாக மீண்டும் மாற்றப்பட வேண்டிய ஒன்று என்ற நிலையை இழக்கிறது.

ஒரே குறிப்பிட்ட சமுதாயத்தை தவிர மற்ற அனைத்து சமுதாயங்களும் மதத்தின் துணையின்றி வாழ்ந்திட முடியுமெனில், இறைச் செய்தி வெளிப்பாடின்றி நற்குணம் மற்றும் இறையச்சம் ஆகியவற்றிற்கு மிகவும் உன்னத மாதிரிகளான ஜொராஸ்டர், புத்தர் அல்லது ஆப்ரஹாம் மூசா, கிருஷ;ணா அல்லது இயேசு கிறிஸ்து ஆகியோரை உண்டாக்க முடியுமெனில், ஒரு குறிப்பிட்ட இனத்திடமிருந்துதான் மற்ற அனைத்து மனித இனங்களும் வழி காட்டுதல் பெற வேண்டுமென்று சொல்வதற்கு எந்த வித நியாயமுமில்லை. இறைவனே அவனுடைய பிரதிபலன் கொள்கையைக் கொண்டு, ஒரு சில தேர்ந்தெடுக்கப்படவர்களுக்கு மாத்திரம் தன் ஒளியை காண்பித்து விட்டு மற்றவர்களெல்லாம் தன்னுடைய படைப்புக்களே இல்லாதது போல், வழி காட்ட மறுத்து அழிவுக்கு உள்ளாக்கினால் அப்படிப்பட்ட கடவுள் எந்த வித மரியாதைக்கு உரியவனுமல்ல. அவன் இருள் ராஜியத்தின் குருட்டு மன்னனைப் போலாவான். அவனை ஏற்றுக் கொள்வதை விட நிராகரிப்பதே சிறந்ததாகும்.

இது மிகவும் பரந்து விரிந்த விசயமாகும். ஒருவர் இது பற்றி மென்மேலும் சிந்திக்கும் போது, இஸ்லாம் சுட்டிக் காட்டியுள்ள சூழ்நிலை(-நபிமார்கள் எல்லா சமுதாயத்திற்கும் ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுவது) இருந்தால்தான் மதமென்பதே தேவையாயிருக்கும் என்பது அவருக்கு மிக தெளிவாக புரியும். காலத்திற்கு காலம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நபிமார்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என இஸ்லாம் கூறுகிறது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் தன்னுடைய படைப்புக்களிமிருந்து அவனுடைய ஒளி மற்றும் சத்திய மார்க்கம் ஆகியவற்றை பெற்றிடும் உரிமையை பறித்திடவில்லை. மேலும் மார்க்கம் என்பது, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் நிலைநாட்டப்பட்ட உண்மையாக காணப்பட வேண்டும் என்றும் அதைப் பின்பற்றுபவர்கள் அதை பரப்புவதையே தங்கள் வாழ்வின் முழு முதற் இலட்சியமாக கருத்தில் கொண்டு செல்படவேண்டுமெனவும் இஸ்லாம் கூறுகிறது. மார்க்கத்தை பரப்புவதிலிருந்து அவர்களை உலகத்திலுள்ள சக்தி எதுவும், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் தடுத்து விடக் கூடாது. சமுதாயங்களை நில அதிர்ச்சிகள் ஆட் கொள்ளலாம், பெரும் புயல் காற்று அவர்களின் சொத்துக்களை நாசப்படுத்தலாம், சத்தியம்-அசத்தியம் ஆகியவற்றின் மோதலால் மனித இரத்தம் ஆறாக ஓடலாம் - ஆனால் சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாத வரை எந்த வித உதவியும் இல்லை என்று மனிதன் உணர்ந்து ஒப்புக்கொள்ளும் வரை இவைகளெல்லாம் ஒன்றும் பெரியவைகளல்ல. இவ்வாறு இல்லையென்றால், மதத்தை பரப்புவதில் மூடு மந்திரம் இருந்தாலோ அல்லது மற்றவர்கள் கேட்டு விடக்கூடாது என்பதற்காக மந்திரங்களை காதுகளில் சொல்வது போன்றவைகளோ இருந்தாலோ அது மதத்தின் அவசியத்தை கேள்விக்குறியாக்குகிறது.

நபி (ஸல்) அவர்களின் மீது நம்பிக்கை கொள்வதே உலகளாவிய அமைதிக்கு வழியாகும்.

அல்லாஹ்வையே வணங்குங்கள்: வரம்பு மீறுபவர்களை(-தாகூத்களை) விட்டு விலகி விடுங்கள் என்ற செய்தியுடன் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நாம் நம்முடைய தூதர்களை
அனுப்பி வைத்துள்ளோம். 16:36

உலகில் தோன்றிய நபிமார்களில் முஹம்மது(ஸல்) அவர்கள் மாத்திரமே இணையற்ற கொள்கையை அளிக்கப்பட்டவராயிருந்தார்கள். தன்னைப் பின்பற்றுபவர்கள் தன்மேல் நம்பிக்கை கொண்டிருப்பது போல் தமக்கு முன் சென்ற எல்லா நபிமார்களின் மேலும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை கட்டாயக் கடமையாக்கியது அவருடைய தூதின் தனிச்சிறப்பான அம்சமாகும். இஸ்லாத்தின் இந்த கொள்கை சத்திய மார்க்கத்தின் உண்மையான அடிப்படையையும் உலக சமாதானத்தையும் உருவாக்கும் உன்னதம் மிக்கதும் மாட்சிமை பொருந்தியதுமாகும் என்பது மாத்திரமல்ல அதிலிருந்து சிறிதளவு கூட விலகிப்போவது கூட முழு மார்க்கத்தையுமே சிதைத்து விடப் போதுமானதாகும். ஏனெனில் மார்க்கம் என்பது, இஸ்லாத்தின் கொள்கையின் பிரகாரம் ஒவ்வொரு சமுதாயத்திலும் காணப்படும் உலகளாவிய உண்மையாகும். தற்காலத்தில் இது போன்ற கண்ணோட்டத்தையுடையவர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு மதத்திலும் தோன்றி வருவது இந்தக் கொள்கை மிகவும் சரியானது என்பதற்கு தெளிவான அடையாளமாகும். ஆனால் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் இந்த உன்னதமான கொள்கையை உலகிற்கு முதன் முதலில் போதித்த இறை வெளிப்பாடு கொண்ட தூதராவார். அவருக்கு முன்னாலுள்ள எந்த நபியும் இந்த உண்மையை வெளிப்படுத்தியதில்லை. எல்லா நபிமாரின் மேலும் நம்பிக்கை கொள்வது கட்டாயம் என்பதை அவருக்கு முன்னால் எந்த மதமும் தன்னுடைய அடிப்படைக் கொள்கையாக ஆக்கியதில்லை.

உலகங்களின் ரப்புஎன்பது திருக்;குர்ஆனிற்கு மாத்திரமே சொந்தமான கொள்கையாகும்.

உலகங்களின் ரப்பான இறைவனுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக (1.1). அவன் கிழக்குக்கு இறைவனாக இருப்பது போல் மேற்கிற்கும் அவனே இறைவனாக இருக்கிறான். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நபிமார்கள் வருகிறார்கள் என்பதை ஒரு பக்கம் விடுங்கள், பெரும்பாலான மதங்கள் தங்களின் இறைவன் எல்லா சமுதாயங்களின் இறைவனாக இருக்கிறான் என்று ஒப்புக் கொள்ளும் அளவிற்குக் கூட சகிப்புத் தன்மையுள்ளவர்களாகவோ தாரளத் தன்மையுடவர்களாகவோ இல்லை. ஆர்யர்கள் மாத்திரமே இறைவனின் குழந்தைகள் என்று பிராமணியமும் வேத மதங்களும் கருதின (நிர்துகா ஏஐ:26). வேதங்களின் பசுத் தாய் பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைஷ;யர்கள் ஆகியோருக்கு மாத்திரமே தன் அமுதை வழங்கி வளர்த்தாள். (அதர்வண வேதம் (ஓஐஓ : 71,1). இஸ்ரவேலர்களின் கடவுளான ஜெஹவோ என்பவரும் மற்றவர்கள் யாருக்குமில்லாமல் அவர்களுக்கு மாத்திரமே கடவுளாக இருந்தார். மதங்களின் சுருக்க வரலாறு எனும் நூலில் ஜான் ஹைலந்து எழுதுவதாவது : ஷயூதர்கள் வணங்கும் கடவுள் ஆரம்பத்தில் நாடோடிகளின் குலத் தெய்வமாகத்தான் கருதப்பட்டு வந்தது ...... அவர்களின் கடவுள் மற்ற அனைத்து சமுதாயங்களின் கடவுள் என்ற கொள்கை யூத சமுதாயத்தால் ஒரு போதும் வரவேற்கப்பட்டு ஏற்கப்படவில்லை.

இரண்டாம் சாட்சி:- தெய்வீக வெற்றியின் உருவில் தெய்வத்தின் சாட்சி

உங்களுக்கும் எனக்குமிடையில் அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். அவன் தன் அடியார்களை மிக்க அறிந்தவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கிறான் என்று நபியே நீர் கூறுவீராக. (17:96)

சத்தியத்தின் வெற்றியையும் அசத்தியம் அடியோடு உருக்குலைந்து போவதையுமே இறைவனின் சான்று என இவ்வசனத்தில் குறிப்பிடப்படுகின்றது. சத்தியம், அதற்கு வரும் எண்ணற்ற எதிர்ப்புகளால் தடைப்படாமல் ஊடுருவி படர்கிறது. அதே நேரத்தில் அசத்தியமோ அதற்கு ஏராளமான அதிகாரமும் செல்வாக்கும் இருந்த போதிலும் தோற்கடிக்கப்பட்டு விடுகிறது. ஏனெனில் ரப்பு தன்னுடைய சர்வ வல்லமையால் மிக்க அறிந்தவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கிறான். ரப்பின் இந்த இரண்டாம் சாட்சியம் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வியக்கத்தகும் வெற்றியால் நிரூபிக்கப்படுகின்றது.நூஹ், இப்ராஹிம், புத்தர், கிருஷ;ணர், ஜொராஸ்டர், மூஸா மற்றும் உலகில் தோன்றிய நபிமார்களிடம் தோன்றிய தெய்வீக அத்தாட்சிகள் மிகவும் பிரத்யட்சமான முறையில் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஆதரவாக வெளிப்படுகின்றது. கடும் எதிர்ப்புகள், குறைந்தஅளவு நண்பர்கள், எதிரிகளின் பெரும் படைகள் ஆகியன இருந்த போதிலும் அவர் பெற்ற பெரும் வெற்றிகள் ஆளுமை ஆகியவைகள் தெய்வத்தின் ஆதரவிற்கு தெளிவான அத்தாட்சிகளாகும். முஹம்மது (ஸல்) அவர்கள் அடைந்த வரலாறு காணாத வெற்றிகளை இஸ்லாத்தின் எதிரிகள் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். உண்மையில் எதிரிகளால் ஒப்புக்கொள்ளப்படும் அதுவே அவருடைய மகத்துவமுமாகும். குர்ஆன் என்ற கட்டுரையில் என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிகா நபி(ஸல்) அவர்களை ஷநபிமார்கள் மற்றும் மதவாதிகள் ஆகியவர்களில் மிகவும் வெற்றி மிக்கவர் என குறிப்பிடுகின்றது.

வாக்குறுதியளிக்கப்பட்ட நபி

நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் அளிக்கிறேன். பின்பு உங்களிடமுள்ள(வேதஞானத்தை) உண்மைப்படுத்தும் ரஸூல் உங்களிடம் வரும் போது நீங்கள் அனைவரும் அவரில் ஈமான் கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அல்லாஹ்(நபிமார்களிடம்) உடன்படிக்கை செய்து நீங்கள் என்னுடைய இந்த உடன்படிக்கையை ஏற்று உறுதி செய்கின்றீர்களா? என்று கேட்டான்.அதற்கு அவர்கள் நாங்கள் ஏற்று உறுதி கூறுகிறோம் என்று கூறினார்கள். அவ்வாறாயின் (இதற்கு)சாட்சியாயிருங்கள் நானும்(இதற்கு) உங்களுடன் சாட்சியாயிருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினான். திருக்குர்ஆன் (3:80)

மேற்கண்ட இரண்டு சாட்சியங்களோடு இறைவனின் மற்றொரு மிகப்பெரும் சாட்சியமும் இந்த வசனத்தில் குறிப்பிடப்படுகின்றது. தங்களிடமுள்ள சத்தியத்தை உறுதி செய்து வேதத்தை உறுதி செய்யும் நபி தோன்றும் போது அவரை மனமார ஏற்று அவருக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எல்லா சமுதாயத்தினரிடமும் அவர்களின் நபிமார்களின் மூலமாக உடன்படிக்கை செய்யப்பட்டது.நபிமார்களின் இந்த உடன்படிக்கை அவர்களின் வேதங்களில் (நபி (ஸல்) அவர்களைப் பற்றிய) முன்னறிவிப்புக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்க்கத்தின் அத்தியாவசியத் தன்மையை நிரூபித்து அதை திடமான ஒரு தளத்தில் நிலைநாட்டும் இந்த மேலான உண்மையை நபி(ஸல்) அவர்களே உலகுக்கு அறியச் செய்தனர். உலகில் இன்று காணப்படும் மற்ற மார்க்கங்களுடைய வேதப் புத்தகங்களின் நிலை உண்மையில் மிகவும் பரிதாபகரமானது. அவைகள் முன்னுள்ள நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரும் வேதப்புத்தகங்களின் மிச்சம் மீதிகள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது இன்றோ எந்த மதத்தினுடைய வேதப் புத்தகமும் அவைகள் வழங்கப்பட்ட உண்மை வடிவிலோ அல்லது அப்போது இருந்தது போல் தூய்மையானதாகவோ இருக்கவில்லை. அத்தகைய வேதங்கள் அந்த மதத்தின் சத்தியத்தை நிரூபிக்க முடியாது என்பது மாத்திரமல்ல அவைகள் வழங்கப்பட்ட நபிமார்களும் உண்மையானவர்கள்தாம் என்று நிரூபிக்கப்பட வேண்டிய சந்தேக நிலையிலுள்ளனர். ஜொராஸ்டர், ஆப்ரஹாம், கிருஷ;ணர்;, கிறிஸ்து ஆகிய தீர்க்கதரிசிகள் அனைவரும் கற்பனை நபர்களேயன்றி உண்மையல்ல என்று எண்ணும் அளவிற்கு அவர்களைப் பற்றி சந்தேகங்களும் தப்பபிப்ராயங்களும் வந்திருக்கிறது. அவர்களின் பெயர், இடம், சரித்திர காலத்திற்கு முன்புள்ள தீர்க்கதரிசிகளின் காலம் ஆகியவற்றைப் பற்றியும், ஏன், அவர்கள் உண்மையில் இவ்வுலகில் வாழ்ந்தார்களா இல்லையா என்று சந்தேகப்படும் அளவு வரை முரண்பாடுகள் நிறைந்தவைகளாக காணப்படுகின்றன.அவர்கள் அனைவரும் உண்மையானவர்களே என்று ஒட்டு மொத்த சான்று பகர்வதன் மூலம் அந்த நபிமார்கள் அனைவரையும் நபி(ஸல்) அவர்கள் நீங்காக் கடமைப்பட்டவர்களாக்கிவிட்டார்கள். உண்மையில், அந்த நபிமார்களின் தற்கால வேதப்புத்தகங்களோ அல்லது அவரைப் பின்பற்றுபவர்களோ செய்ய முடியாத மாபெரும் காரியத்தை நபி(ஸல்) அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.இவ்வாறாக,அவர்களைப் பற்றி அவர் அளித்த ஒட்டுமொத்த சான்றின் மூலம் மார்க்கம் சத்தியமான(அவசியமான)து என அவர் நிரூபித்துள்ளார். மார்க்கச் சிந்தனையற்று, இவ்வுலகே மனிதனின் இறுதி என மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில்,மார்க்கத்தின் உண்மையைப் பற்றி எல்லா சமுதாயத்திலுள்ள அறிவும் பரந்த மனப்பான்மையும் கொண்ட மக்களனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஒரு ஆதாரம் அரிதாகவே காணக் கிடைக்கும்.

அனைத்து மதத்தைத் சேர்ந்த பரந்த நீதிமிக்க மனப்பான்மை கொண்ட அனைவரையும் இது போன்ற முக்கியமான வேறொரு சாட்சியின் பக்கம் நாம் அழைக்கிறோம். நபி(ஸல்) அவர்கள் எல்லா தீர்க்கதரிசிகளின் சத்தியத்திற்கு சான்று பகர்ந்து அவர்கள் அனைவரிலும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டியதை கடமையாக்கியதைப் போல், உலகின் எல்லா தீர்க்கதரிசிகளும் நபி முஹம்மது(ஸல்) அவர்களின் சத்தியத்திற்கு சாட்சி கூறி அவரின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டுமென தங்களைப் பின்பற்றியோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இறுதியாகத் தோன்றவிருக்கும் மிகப்பெரும் அந்த நபியைப் பற்றிய மகிழ்வுச் செய்தியை அனைவருக்கும் அளித்திடாமல் எந்த நபியும் சென்றதில்லை.

முஹம்மது(ஸல்) அவர்கள் எல்லா தீர்க்கதரிசிகளும் உண்மையானவர்கள் என்று சான்று பகர்ந்ததே உலக சமாதானத்திற்கும் மனித சகோதரத்துவத்திற்கும் வலுவான அடிப்படையாக இருக்கிறது. அதே நேரத்தில், உலகத்திலுள்ள அனைத்து தீர்க்கதரிசிகளும் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் உண்மையை உறுதிப்படுத்தினார்களென்பது எல்லா மார்க்கங்களின் உண்மையையும் ஒற்றுமையயும் நிரூபிக்கும் மற்றொரு மிகவும் பலமான ஆதாரமாகும்.

ஒவ்வொரு இனம் காலம் ஆகியவற்றைச் சேர்ந்த பிரபலமான தீர்க்கதரிசிகள் அனைவரும் முஹம்மது(ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி முன்னறிவித்துள்ளார்கள் என்ற விசயத்தை சத்தியத்தை தேடும் ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். முஹம்மது(ஸல்) அவர்கள் உலகின் அனைத்து நபிமார்களையும் உறுதிப்படுத்துபவர்களாவார். இந்த கொள்கையே, நாம் கூறியது போல், உலக சமாதானத்திற்கும் இணக்கத்திற்கும் அடிப்படையாகும். உலகின் நபிமார்கள் முஹம்மது(ஸல்) அவர்களை உறுதிப்படுத்துவர்களகவே இருந்தனர். இந்த ஒன்றுதான் உலக மதத்தின் புனித கொள்கையை உருவாக்குகிறது. இந்த புனித எல்லைகளை விட்டு விலகி இருப்பவன் விரைவிலேயே இறை மறுப்பு கொள்கையில் வீழ்ந்து நாத்திகனாக ஆகிடக் கூடும்.

வேதமுடையோரின் சாட்சி

உங்களுக்கும் எனக்கும் இடையில் (நான் நபியென்பதற்;கு) அல்லாஹ்வும் (முன்னுள்ள) வேதங்களை அறிந்தோரும் சாட்சியாக உள்ளனர் என்று நபியே அவர்களிடம் நீர்
கூறுவீராக. (திருக்குர்ஆன் 13:43)


எல்லாம் வல்ல இறைவனின் சாட்சிக்கு அடுத்த படியாக உலகின் பல்வேறு பிரதேசங்களில் வந்த நபிமார்களுக்கு பல்வேறு மொழிகளிலும் அருளப்பட்ட வேதங்களின் சாட்சி இருந்த போதிலும், மற்ற மதங்களின் வேதங்கள்(இஸ்லாத்திற்கு முன்) பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வந்த போதிலும் முஸ்லிம்கள் கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக அவைகள் இருக்கும் மொழியை படித்து அந்த வேதங்களை ஆராய்ச்சி செய்தார்களில்லை. இப்பொழுது உள்ள காலமானது இஸ்லாம் மற்ற எல்லா மதங்களையும் விட மேலோங்கி ஆளுமை செய்யும் காலமாகும். இஸ்லாத்தின் சத்தியத்தை நிரூபிக்கும் எண்ணற்ற ஆதாரங்கள் காணக்கிடைக்கும் காலமாகும் என்ற உண்மையை மறுக்க முடியாது. அவன் தன் மார்க்கத்தை மற்ற அனைத்து மார்க்கங்களையும் விட மேலோங்கச் செய்வான்(9:33) என்ற தெய்வ வாக்குறுதி நிறைவேறும் காலமாகும். உலகிலுள்ள பல்வேறு மதங்களையும் சேர்ந்த நபிமார்களின் ஒட்டுமொத்த சாட்சியங்கள் நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு சாதகமாக வெளிப்படும் காலமுமாகும். மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்கள் அவர்களின் வேதங்களை எந்த அளவு ஜாக்கிரதையாக மறைத்து மறைத்து வைத்திருந்தார்கள் என்பதே ஒரு நீண்ட கதை. புகழ் பெற்ற அறிஞர் ஸர். வில்லியம் ஜோன்ஸ் அவர்களின் சம்பவமே நாம் கூறுவதை படம்பிடித்து காண்பிக்கப் போதுமானதாகும். ஸர். வில்லியம் ஜோன்ஸ் அவர்களின் தீவீர விடா முயற்சியானது சமஸ்கிருத மொழியை மேற்கத்திய உலகிற்கு கொண்டு சென்றது. அதனால்தான் மிகவும் அரிதான,இருளில் கிடந்த வேதங்களை இன்று ஐரோப்பா கிழக்கத்திய மக்களுக்காக பிரசுரித்துக் கொண்டிருக்கிறது. ஸர். வில்லியம் ஜோன்ஸ் அவர்கள் உச்ச நீதி மன்றத்தின் நீதிபதியாக கல்கத்தாவிற்கு 1783ம் ஆண்டு வந்தார். அவர் வங்காள ஆஸியாடிக் சொஸைட்டி என்பதை நிரூபி இந்த நாட்டை என்றும் மறக்க முடியாத மிகப்பெரும் நன்றிக் கடனுக்கு ஆளாக்கியவராவார். இந்த சொஸைட்டியின் இடையறாத, தளராத முயற்சியினால்தான் வேதங்களின் பழம் பிரதிகளும் மற்ற சமஸ்கிருத புத்தகங்களும் பகலின் ஒளியை காணத் துவங்கின. ஸர்.வில்லியம் ஜோன்ஸ் அவர்கள் சமஸ்கிருத மொழியை கற்க விரும்பிய போது, அவர் அதற்காக ஏராளமான ஊதியம் தர ஆயத்தமாயிருந்த போதிலும் நாட்டின் எந்த இடத்திலும் அவருக்கு அதை கற்றுக் கொடுப்பதற்கு எந்த பண்டிட்டும் கிடைக்கவில்லை. ஸர். வில்லியம் ஜோன்ஸை சந்தித்து சம்பளம் பற்றி பேசி முடிவெடுப்பதற்காக இரண்டு மூன்று பண்டிட்டுகள் அவரை தனியே ரகசியமாக சந்திக்கச் சென்றது. ஆனால் குருமார்கள் கூட்டம் அதை அறிந்து அவர்கள் அனைவரையும் சமூக நீக்கம் செய்து, கூடி உண்ணுதல், ஒருவருக்கொருவர் திருமண சம்பந்தங்கள் செய்தல் போன்ற அவர்களுடனான எல்லா வித சமூக உறவுகளிலிருந்தும் அவர்களை ஓதுக்கி வைத்து விட்டது. அந்த சமூகத்தின் அவ்வளவு கடுமையான மனப்பாங்கு சில பண்டிட்டுகளின் ஆசைகளிலும் மண்ணைப் போட்டது. ஆகவே பிரச்னை தீர்க்கப்படாமலே இருந்தது. கிருஷ;ண நகரின் மகாராஜா சிவசந்த்ரா ஸர் வில்லியம் ஜோன்ஸின் நண்பராவார். அவரும் தீவீர முயற்சி செய்தும் இந்த ஷதீண்டத்தகாத வில்லியம் ஜோன்ஸிற்கு ஒரு பண்டிட்டைப் பெற முடியவில்லை. இறுதியாக ராம் லோச்சானா என்ற குடும்பமற்ற ஒரு பண்டிட் இந்த ஆபத்து நிறைந்த வேலையை செய்ய துணிந்தார். பண்டிட் அவர்கள் திருமண உறவை தவிர்த்து விட்டு தனியாக வாழ்வதையே தேர்ந்தெடுத்திருந்தார். அவருக்கு நண்பர்கள் பலர் இருந்தாலும் மாதம் நூறு ரூபாய் சம்பளம், அவருடைய வீட்டிலிருந்து சவுரன்ஜிக்கு பல்லக்கில் பயணம் ஆகிய கவர்ச்சிகள் அவரை நண்பர்களை ஒரு பொருட்டாக கருதச்செய்யவில்லை. தன் மாணவன் மேல் பண்டிட் விதித்த நிபந்தனைகள் மிகவும் கடுமையானவையாக இருந்தன. ஆனாலும் ஸர். வில்லியம் ஜோன்ஸ் அவர்கள் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்ற தன்னுடைய தீர்மானத்திலிருந்து எள்ளளவும் தடுமாறிவிடவில்லை. மாளிகையின் கீழ்த்தளத்திலிருந்த ஒரு அறை இதற்காக ஓதுக்கப்பட்டது. பண்டிட்டுடைய உத்தரவுப்படி அதனுடைய தரையில் வெள்ளை சலவைக்கல் இடப்பட்டது. எந்த வகையான இறைச்சியும் மாளிகையின் சுற்றுப்புறத்தில் கூட கொண்டு வரப்பட அனுமதிக்கப்படவில்லை. ஸர்.வில்லியம் வெறும் வயிற்றோடுதான் பாடம் கேட்க வேண்டியதாயிருந்தது. எப்பொழுதாவது அவர் பண்டிட்டை மிகவும் தாழ்மையோடு வேண்டிக் கொண்டபோது மாத்திரம் ஒரு கோப்பை தேனீர் அருந்த அனுமதிக்கப்பட்டார். பாடம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் ஒரு இராணுவ வீரன் பண்டிட்டின் வீட்டிற்குச் சென்று பாடம் தொடங்க நேரமாகிவிட்டது என்று தெரிவித்தார். அதன் பிறகே பண்டிட் இந்த கீழ் ஜாதியினருக்காக வருவார். பண்டிட் அவர்கள் தன்னுடைய புனிதம் நிறைந்த மேலங்கியை கழற்றி வைத்து விட்டு (தீண்டத்தகாத) ஜோன்ஸின் முன்னால் போவதற்காக, தனியான உடை அணிந்து கொள்ளும் பொருட்டு, படிப்பறைக்கு ஒட்டியே ஒரு அறை ஒதுக்கப்பட்டது. கங்கை நீரால் தினமும் அந்த படிப்பறையையும் அதில் உள்ள மரச்சாமான்கள் அனைத்தையும் கழுவி தீட்டு நீக்குவதற்கென ஒரு ஹிந்து நியமிக்கப்பட்டார். பண்டிட் கோபக்காரராக வேறு இருந்தார். இறைச்சி தின்பவர்கள் ஸமஸ்கிருத மொழியை கற்றுக் கொள்ள முடியாது ஏனெனில் அது தீண்டப்படத்தகாதவர்களின் மொழியல்ல, அது தேவ மொழியாகும் என்று சொல்லி அவர் ஸர். வில்லியம் ஜோன்ஸை அடிக்கடி திட்டுவார். ஸர்.வில்லியம் ஜோன்ஸ் இந்த மாதிரியான திட்டுதல்கள் அனைத்தையும் புன்னகையோடு பொறுத்துக்கொண்டார். இறுதியாக அவர் ஸமஸ்கிருதத்தை கற்றே விட்டார். ஸர். வில்லியம் ஜோன்ஸின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அவருடைய ஆர்வம் ஒரு சில நாட்களிலேயே குன்றிப் போயிருக்கும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், இந்து மற்றும் ஜொராஸ்ட்ரீய மத வேதங்களை அவைகளின் இருள் குகையிலிருந்து வெளிக்கொண்டு வந்து அவைகளுக்கு பகலின் ஒளியை காட்டிய அத்தகையவர்களின் முயற்ச்சிக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதுதான். ஆரம்பத்தில் இந்த முயற்சிகள் யாவும் வியாபார நோக்கை கொண்டவைகளாக இருந்த போதிலும் பல்வேறு மொழிகளை கற்று பல பழமையான புத்தகங்களை பிரசுரித்த அவர்களின் தளராத முயற்ச்சிக்கும் ஆர்வத்திற்கும் நாம் நன்றிக் கடன் பட்டே இருக்கிறோம். இங்கேயும் முஹம்மது(ஸல்) அவர்களுடைய உண்மைக்கான நாம் ஓர் அத்தாட்சியைக் காணவே செய்கிறோம். உண்மையில், உலக வானில் ஷநபித்துவத்தின் உச்சிக் கதிரவன் தோன்றப் போகும் மகிழ்வுச் செய்தியை கொண்டு வந்த ஷவிடிவெள்ளியே இயேசு கிறிஸ்து ஆவார். அதைப் போலவே அவரைப் பின்பற்றியவர்களின் இலக்கிய மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் உலகிற்கு நபி(ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை நோக்கி வழிகாட்டி, அவருடைய சத்தியற்கு சான்று பகரவும் செய்துள்ளது. ஆனால் தற்கால முஸ்லிம்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக கல்வி கற்பதில் காட்டும் அலட்சியமும், அவர்களின் கலாச்சார பண்பாட்டின் வீழ்ச்சியும், ஒருவருக்கொருவர் காபிராக்கிக் கொண்டு தங்களையே அழித்துக் கொள்ளும் அவர்களின் சண்டையும் இஸ்லாத்தையே உருக்குலைத்துள்ளது. ஆனால் நபி முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களால் மாத்திரம் அருள் செய்யப்பட்டவராயில்லை. இறைவனும் அவனுடைய வானவர்களும் அவருக்கு அருள் (-பிராத்தனை) செய்கிறார்கள். துரதிருஷ;டவசமாக இன்றைய காலத்திலுள்ள முஸ்லிம்கள் தங்களின் தவறான போக்குகளால் நபி(ஸல்) அவர்களின் பெயருக்கே இழிவை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் அருளும் அவன் வானவர்கள் அவனிடம் செய்யும் பிரார்த்தனையும் எல்லா கறைகளையும் நீக்கி அவர்கள் மேல் சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை பரிசுத்தப்படுத்துகிறது. ஐரோப்பாவில் இன்று செய்யப்படும் எல்லா இலக்கிய மற்றும் தத்துவ ஆராய்ச்சிகளும் மற்றும் பழங்காலத்திய மதங்களைப் பற்றி வெளியிடப்படும் பெரும் பெரும் புத்தகங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் உண்மையை நிரூபிக்கும் ஆதாரங்கள் நிரம்பியவைகளாகவே உள்ளன. நபி(ஸல்) அவர்களின் வருகைக்கு முன்னால் கிறிஸ்துவ சன்னியாசிகள் பரக்லீத்தின் (அஹ்மது) வருகையை மிக ஆவலோடு எதிர்பார்த்து, தங்களின் இடையறாத வணக்க வழிபாடுகள், மனப்பூர்வமான பிரார்த்தனைகள், மற்றும் ஸலவாத்துக்கள் ஆகியவற்றால் நபி முஹம்மது(ஸல்) அவர்களின் வருகையைப் பற்றிய சந்தோச செய்தியை உலகிற்கு அறிவித்துக் கொண்டிருந்தார்கள் எனில், அது போலவே இன்றும் கூட அவர்கள்(கிறிஸ்தவர்கள்) தங்களின் தீவீர ஆராய்ச்சிகளாலும் இலக்கிய சேவைகளாலும் நபி(ஸல்) அவர்களின் உண்மைக்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றனர். இயேசு கிறிஸ்துவிற்கும் அவருடைய தாயாருக்கும் அவரின் சந்ததிக்கும் நபி(ஸல்) அவர்கள் செய்த உதவி சிறியதல்ல.ஜ2ஸ அவரைப் பின்பற்றியோர்கள் இஸ்லாத்திற்கு சேவை செய்வதற்காக(மறைமுகமாக) இன்று ஏராளமான மில்லியன் கணக்கான பணங்களை செலவிட்டும் பல விதமான கஷ;டங்களை அதே பாசத்துடன் தாங்கி (நபி(ஸல்) அவர்களின் நபித்துவத்தை உண்மையென நிரூபிப்பதற்கு) பாடுபடுவது உண்மையில் அதற்கான ஒரு பணிவான கைமாறே தவிர வேறொன்றுமில்லை. அவர்களின் கடும் உழைப்பினால் அவர்கள் சத்திய ஒளியைக் கண்டார்களேயனால் அது வியப்பிற்குரியதொன்றுமேயில்லை.

முஸ்லிம்கள் இத்தகையகடமைகளை செய்யத்தவறியது அவர்களுக்கு அதற்காக இறைவன் புறத்திலிருந்துள்ள வெகுமதிகளை கிடைக்காமல் ஆக்கிவிட்டது என்பதில் சந்தேகமில்லை.அதே நேரத்தில்,அது இவ்வாறுதான் நடக்கவேண்டுமென ஏற்கனவே விதிக்கப்படாமலும் இருக்கவில்லை. இந்த பழமையான வேதங்களை அவைகளின் இருளிலிருந்து வெளிக் கொண்டு வருவதற்கு முஸ்லிம்கள் காரணதாரிகளாக இருந்தார்களானால், அவைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிய குற்றம் அவர்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும். ஓரு புறம் முஸ்லிமல்லாதவர்கள் தங்களின் வேதங்களிலுள்ளவற்றை மறைத்து வைப்பதற்கு முயற்ச்சித்திருந்தார்களேயானால்,அவைகளை வெளிக்கொண்டு வருபவர்களும் முஸ்லிம் அல்லாதவர்களே ஆவார்கள். அதுவும் பெரும்பாலும் இஸ்லாத்தின் எதிரிகளேயாவார்கள். இந்த வேதங்களிலுள்ள முன்னறிவிப்புக்கள் அனைத்தும் பிற்காலத்தில் நுழைக்கப்பட்டது என்ற சந்தேகத்தின் நிழல் கூடப்படாதவாறு பத்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காக அவ்வாறு விதிக்கப்பட்டிருந்தது போலும்.

இஸ்லாத்தின் வளர்ச்சிக் காலத்தில் வேதங்கள், தஸ்தகீர்(-பார்சி வேதம்) மற்ற புராதான வேதங்கள் ஆகியவைகள் அவைகளின் இருள் குகைகளிலேயே இருந்து வந்தன. அவைகளில் மறைந்திருந்த புதையல்கள் முஸ்லிம்கள் வீழ்ச்சியுறும் காலத்தில் அவர்களுக்கு அளிக்கப்படவிருந்தன போலும். இஸ்லாம் தன்னுடைய சத்தியத்தை நிலைநாட்டி அதை உலக மாந்தர் அனைவரும் அறிந்து கொள்ளச் செய்வதற்காக இவ்வுலக சக்திகள் எதனையும் நம்பியிருக்கவில்லை; மாறாக, பல நூற்றாண்டுகளாக மற்ற மதங்களின் பெட்டகங்களில் இருந்த இது போன்ற விலை மதிக்கமுடியாத மாணிக்கங்களையும் அது கொண்டிருக்கிறது என்பதை அது இதன் மூலம் நிரூபித்துள்ளது