9ம் வகுப்பு மாணவியை பைபிள் பயிற்சி என கற்ப்பமாக்கிய கிருத்துவ பாதிரியார் கைது 1

01. பள்ளி மாணவி கற்பழிப்பு : பாதிரியாருக்கு 15 நாள் காவல்


தர்மபுரி: பள்ளி மாணவியை கற்பழித்து, கர்ப்பிணியாக்கிய பாதிரியார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரியைச் சேர்ந்த பாதிரியார் அமலநாதன்(28). இவர், கடந்தாண்டு மே மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு, பைபிள் போதனை பயிற்சி அளித்தார்.

அதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எங்காலப்பட்டி சாவடியூரை சேர்ந்த அமலநாதன் மகள் சுமத்ரா மேரி (16) என்பவரும் ஒருவர். நல்லம்பள்ளி செயின்ட் தாமஸ் மகளிர் பள்ளி விடுதியில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்த சுமத்ரா மேரி, விடுமுறையில் வீட்டில் இருந்ததால், பைபிள் பயிற்சிக்கு சேர்ந்தார்.

பயிற்சி பெற்ற மாணவ, மாணவியரை, பாதிரியார் அமலநாதன், கடந்த மே 24ம் தேதி பாலக்கோடு தும்பலஹள்ளி அணைக்கு சுற்றுலா அழைத்து சென்றார். அங்கு சுமத்ரா மேரியை, பாதிரியார் அமலநாதன் கற்பழித்து விட்டார். "அதை வெளியில் சொல்லக்கூடாது' என மிரட்டி அனுப்பி விட்டார்.

பயந்து போன சுமத்ரா மேரி, தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லவில்லை. மீண்டும் பள்ளிக்கு சென்ற போது, கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த நிர்வாகம், அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.

தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் சுமத்ரா மேரி, கற்பழித்த பாதிரியாரை கைது செய்யக்கோரி தனது தாய் மதலைமேரியுடன் சென்று டி.எஸ்.பி., விஜயராகவனிடம் புகார் செய்தார்.

விசாரித்த தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், நம்ப வைத்தல் (417), கற்பழித்தல் (376), கொலை மிரட்டல் 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, பாதிரியாரை கைது செய்தனர். தர்மபுரி ஜே.எம்., முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியாரை, 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.

நன்றி : தினமலர்