Showing posts with label இந்து பூசாரி. Show all posts
Showing posts with label இந்து பூசாரி. Show all posts

சொந்த மகள்களை 10 வருடமாக கற்பழித்த ஹிந்து தந்தை கைது!!


மும்பை: நெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே.

சமீபத்தில்தான் இந்த வழக்கு அங்குள்ள கோர்ட்டி்ல விசாரணைக்கு வந்தது. அப்போது தனது தந்தை செய்த கொடுமைகளை பல மணி நேரம் வாக்குமூலமாக அளித்தார் அந்த அப்பாவி பெண்.

இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்கு அவரது மனைவியும் துணை போயுள்ளார் என்பதுதான் நெஞ்சை பதற வைக்கும் செய்தியாக உள்ளது.

அந்த தொழிலதிபர் தனது 21 வயது மகளை கடந்த பத்து வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார். மேலும் 15 வயதாகும் 2வது மகளையும் கடந்த சில மாதங்களாக இதே செயலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார்.

தனது தங்கையையும் தந்தை கேவலப்படுத்த ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகள் தனது தாய் வழி பாட்டியிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். இதையடுத்து இந்த அசிங்கமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.


ஹஸ்முக் ரத்தோட் என்ற மடச் சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ்படிதான் இந்த அசிங்கமான செயலை செய்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர். அந்த கேடிச் சாமியார்தான், உங்களது மகள்களை கற்பழித்தால் குடும்பம் விருத்தி அடையும் என கூறினாராம்.


தனது மூத்த மகளை 11வயதிலிருந்து கற்பழித்து வந்துள்ளார் அந்தத் தந்தை. மேலும் சாமியாரின் பேச்சைக் கேட்டு தனது இளைய மகளையும் கற்பழிக்க ஆரம்பித்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த சாமியாரும், தொழிலதிபரின் 2வது மகளை சிலமுறை கற்பழித்துள்ளார் என்பதுதான்.

தற்போது போலீஸார் அந்த காமக் கொடூர தந்தை, அத்தனையும் தெரிந்தும் அமைதியாக இருந்து வந்த அவரது மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

12 வயது சிறுமி மேகலாவை கற்பழித்த இந்து பூசாரி

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி!

திங்கள்கிழமை, செப்டம்பர் 3, 2007

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் கோவிலுக்கு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி கைது செய்யப்பட்டார்.

ஓமலூர் அருகே உள்ளது பாகல்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மகள் மேகலா (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது தோழிகளோடு சேர்ந்த நேற்று அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.

கோவிலின் பூசாரியான கோவிந்தசாமி மேகலாவை தோழிகளிடமிருந்து தனியாக அழைத்து கோவிலின் மேல் தளத்திற்கு சென்றார்.

சிறிது நேரத்தில் மேகலா உதவி கோரி கூச்சல் போட்டார். அதைக் கேட்ட பொது மக்கள் மேல் தளத்துக்குச் சென்றபோது, தன்னை பூசாரி பலாத்காரம் செய்ய முயன்றதை மேகலா தெரிவித்தார்.

இதையடுத்து கோவிந்தசாமியை தாக்கிய பொது மக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பூசாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நன்றிங்க...