பிஷப் அறிவிப்பால் சிறுமிகளை கற்பழிக்க தமிழக பாதிரிகள் ஆர்வம்

தர்மபுரியில் மறை மாவட்ட பிஷப் ஜோசப் அந்தோணி இருதயராஜ் நிருபர்களிடம் கூறுகையில்."உண்மையில் மாணவியை எங்கள் பாதிரியார் அமலநாதன் கற்பழித்து இருந்தால், அவருக்கு சிறுமி சுமத்ரா மேரியை திருமணம் நடத்தி வைப்போம். அவரை பொறுப்பில் இருந்தும் நீக்குவோம்,'' என்றார்..

சுவர் ஏறி குதித்து பாதிரியார் ஓட்டம்: தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

தர்மபுரி: கற்பழிப்பு புகாருக்கு ஆளான பாதிரியாரும், அவரை அழைத்து வந்த போலீசாரும், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சுவர் ஏறிக் குதித்து ஓடிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலக்கோடு அடுத்த எங்காலப்பட்டி சாவடியூரை சேர்ந்தவர் அமலநாதன். அவரது மகள் சுமத்ரா மேரி (16). பள்ளி மாணவி. பைபிள் போதனை வகுப்புக்கு சென்ற அவரை, கிருஷ்ணகிரி எலத்தகிரியை சேர்ந்த அமலநாதன் என்ற பாதிரியார் கற்பழித்து கர்ப்பிணியாக்கி விட்டார். அது தொடர்பாக சுமத்ரா மேரி கொடுத்த புகார், போலீஸ் விசாரணையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி பாதிரியாருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.நேற்று தர்மபுரி அரசு மருத்துவமனையில், பாதிரியார் அமலநாதனுக்கு ரத்தம், சிறுநீர், விந்தணு பரிசோதனை நடந்தது. பரிசோதனைக்கு வந்த பாதிரியாரை புகைப்படம் எடுக்க அரசு மருத்துவமனையில் பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். அவரை படம் எடுக்க விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் திசை திருப்பும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். வேறு வார்டில் பரிசோதனை நடப்பதாக கூறினர். பத்திரிகையாளர் அங்கு சென்ற நேரத்தில், போலீஸ் ஏட்டுகள் வெங்கடாசலம், சேகர் ஆகிய இருவரும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து பாதிரியார் அமலநாதனை அழைத்து கொண்டு, மருத்துவமனையின் காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்தனர். போலீசார் உட்பட மூவர் சுவர் ஏறிக் குதித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து வந்த கைதி போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து விட்டதாகவும் தகவல் பரவியது. சற்று நேரம் கழிந்த பிறகே, உண்மை நிலவரம் தெரியவந்தது.தர்மபுரியில் மறை மாவட்ட பிஷப் ஜோசப் அந்தோணி இருதயராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,""பாதிரியார் அமலநாதன் மீது சொல்லப்பட்ட புகார் உண்மையில்லை. நாங்கள் இது குறித்து விசாரித்தோம். சுமத்ரா மேரி கற்பழிப்புக்கு காரணமானவர் யார் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியும். வழக்கு விசாரணைக்கும், எந்த பரிசோதனைக்கும் பாதிரியார் அமலநாதன் தயாராக உள்ளார்.""உண்மையில் மாணவியை அவர் கற்பழித்து இருந்தால், அவருக்கு சுமத்ரா மேரியை திருமணம் நடத்தி வைப்போம். அவரை பொறுப்பில் இருந்தும் நீக்குவோம்,'' என்றார்.

நன்றி : தினமலர்