உண்மையான பைபிளை பின்பற்றி வாழும் நல்ல முஸ்லிம்கள்

முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களாவார்களா?


சமீபத்தில் பைபிளின் ஒரு பிரதி எனக்கு கிடைத்தது. புத்தகங்களை அதிகம் விரும்பிப் படிப்பதால் இதையும் விட வில்லை. இதைப் படிப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

பைபிள் இன்றைய உலகின் மிகப் பெரிய சமுதாயமான கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதாக இருந்தாலும் உலகின் மற்றைய அடுத்த இரு பெரிய சமுதாயங்களான முஸ்லிம் மற்றும் யூதர்களோடும் தொடர்புடையது.(இதில் முஸ்லிம்கள் பைபிளை நம்புகின்றனர். ஆனால் யூதர்கள் பைபிளை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைக் குறித்து மற்றொரு சமயம் பார்க்கலாம்).

உலகின் இம்மூன்று பெரிய சமுதாயங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உண்டு. அவற்றில் சில,

1. உலகிற்கு ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தை கொண்டவை(இந்து மதமும் அடிப்படையில் ஒரே கடவுளைத் தான் கூறுகிறது)

2. மூன்று மதங்களுமே உருவ வழிபாட்டுக்கு எதிரானவை.

3. மூன்று மதங்களுமே உலகின் ஆதி மனிதனாக ஒரே மனிதனையே குறிப்பிடுகின்றன.

4. எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஒற்றுமை இம்மூன்று சமுதாயங்களும் ஒரு மனிதனின்(ஆபிரகாம்) சந்ததியே.

ஒரே தந்தையின் மக்களாகிய இம்மூன்று சமுதாயங்களும் இன்று பிரிந்து கிடப்பது மட்டுமல்லாமல் உலகின் பிரச்சனைகளுக்கும் காரணிகளாக விளங்குகின்றன. ஏன் இவர்கள் பிரிந்துள்ளனர் என்ற கேள்வி மனதில் பலமுறை எழுந்ததுண்டு. நம்பிக்கை அடிப்படையில் சில விஷயங்கள் தெரியுமென்றாலும் அதையே மற்றொரு சமுதாயத்திற்கு எதிராக கூறுவது சரியில்லை என்பதால் அதனைக் குறித்து பிறரிடம் பேசுவதில்லை. ஒரு சமுதாயத்தைக் குறித்து கூடுதல் அறிய அவர்கள் பின்பற்றும் வேதங்களை படிப்பதே சரியான வழி.

இக்காரணங்களாலும் கூடுதல் பைபிளைக் குறித்து அறியும் ஆவலில் படிக்கத் தொடங்கினேன்.

படிக்கப் படிக்க பல ஆச்சரியங்கள், பல சந்தேகங்கள், பல கேள்விகள்(அது தானே நம் பணி).

எனக்கு நண்பர்கள் வட்டம் என்று எடுத்துக் கொண்டால் மீனவர்களும், ஆசாரிகளும் தான் அதிகம். உண்மையில் கிறிஸ்தவ மீனவ நண்பர்களுக்கு பைபிள் என ஒன்று இருப்பதே ஞாயிறுகளில் தான் நினைவுக்கு வரும். அதுவும் பள்ளியில் பாஸ்டர் என்ன படிக்கிறாரோ அதைக் கேட்பதோடு சரி. எனக்கு எழுந்த சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்டபொழுது அவர்கள் கூறிய பதில் - "போடேய் ஒனக்கு வேற வேலயில்ல! எவன் இங்க இதெல்லாம் படிக்கான்!". எனக்கு சிரிக்கவா அழவா என்று தெரியவில்லை. இருந்தும் பல வழிகளில் எனக்கு எழுந்த சந்தேகங்களுக்கு விடை காண முயண்றேன். இது வரை கிடைக்கவில்லை. சரி இங்கேயாவது விடை கிடைக்கிறதா பார்ப்போம் என்று எனக்கு எழுந்த கேள்விகளை ஆதாரத்துடன் இங்கு குறிப்பிடுகிறேன். தெரிந்தவர்கள் பதிலிடுங்களேன்.

1. ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்! நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.

2. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

3. அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான்@ தேவன் அவனோடே பேசி:

4. நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.

5. இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

6. உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்@ உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.

7. உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.

9. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.

10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்

11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம்நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்@ வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.

13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும் விருத்தசேதனம் பண்ணவேண்டியது அவசியம்@ இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.

14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். [ஆதியாகமம் (17:1௧4) ]

23. அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.

24. ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

25. அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.

26. ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.

27. வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள
[ஆதியாகமம் (17:23௨7)]

கர்த்தர் ஆபிரகாமிற்கு இடும் ஓர் கட்டளையைக் குறித்து பைபிளின் ஆதியாகமம் 17 ஆவது அத்தியாயம் குறிப்பிடுவதை மேல் வரிகள் தெரிவிக்கின்றன.

அக்கட்டளையை நிறைவேற்றினால் ஆபிரகாமின் சந்ததிகளை பெருகச் செய்வதாகவும், தவறினால் தன் ஜனத்திலிருந்து அறுப்புண்டு போவான் என்றும் இறைக் கட்டளை குறிப்பிடுகிறது.

இவ்விஷயத்தில் இன்று உலகில் முஸ்லிம்களே அக்கட்டளையை கடமையாக வைத்து நிறைவேற்றுகின்றனர் - கேள்விப்பட்டதை வைத்து சில யூதர்களும்.

ஏன் கிறிஸ்தவர்கள் என்று தன்னைக் கூறிக்கொள்பவர்கள் இக்கட்டளையை நிறைவேற்றுவதில்லை?

பைபிளைப் பின்பற்றுவதில் கிறிஸ்தவர்களை விட முஸ்லிம்கள் தானே முன்னணியில் இருக்கின்றனர்?

எனில் முஸ்லிம்கள் தானே உண்மையான கிறிஸ்தவர்கள்?

நன்றி : சிந்தனைச் சிதறல்கள்

உண்மையான பைபிளை பின்பற்றுபவர்கள் நல்ல முஸ்லிம்கள் சரி!அப்ப பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்பனவற்ற பின்பற்றுபவர்கள்? கீழே உள்ளதை வாசித்து பாருங்கள்!!


பிஷப் அறிவிப்பால் சிறுமிகளை கற்பழிக்க தமிழக பாதிரிகள் ஆர்வம்


9ம் வகுப்பு மாணவியை பைபிள் பயிற்சி என கற்ப்பமாக்கிய கிருத்துவ பாதிரியார் கைது