ஹெராயின் போதையே!! ஹிட்லரின் வாரிசே!!! (Part-2)

முஹம்மதைத் திட்டினால் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் வயிற்றில் குத்தி கொன்று விட்டு வா. உன் மீது எந்த குற்றமும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நபிகளார் சொன்னதாக நரேந்திர மோடி பாணியில் இவர்கள் புழுகியிருப்பதின் உண்மைநிலை விளங்கிவிட்டது. இப்பொய்யர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது.

நாம் கேட்கிறோம், கடந்த 100 ஆண்டுகளில் இப்பூமியில் தனது போர்வெறியின் காரணமாக மனித இனத்தையே சுத்திகரிப்பு செய்ததிலும், கொடும் தாக்குதல்கள் புரிந்து பல நாடுகளை நிர்மூலமாக்கியதிலும் முன்னனியில் நிற்பவர்கள் அன்றைய ஹிட்லர் முதல், முசோலின் உட்பட அமெரிக்காவின் இன்றைய ஜார்ஜ்புஷ் வரை உள்ள கிருத்தவர்களே. இவர்களுக்கும், இவர்களின் மதத்திற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று இவர்கள் முடிவுசெய்யட்டும்.

கிருத்தவர்கள் தங்களின் மதத்தின் பெயரால்தான் அநியாயமான முறையில் பல சிலுவை யுத்தங்களை முஸ்லிம்கள் மீது அன்றுமுதல் இன்றுவரை திணித்துக் கொண்டிருக்கின்றனர்.


இன்னும், அன்று இவ்வுலகில் தோன்றிய நபிமார்கள் எனப்படும் பல தீர்க்கதரிசிகளை கொலைசெய்தது முதல் இன்று யூதர்களின் நாடு என்ற இல்லாத இஸ்ரேலை உருவாக்கிக் கொண்டு, தொடந்து பாலஸ்தீன முஸ்லீம்களின் ரத்தத்தை அட்டைப்பூச்சிபோல் உருஞ்சிக்கொண்டிருக்கும் ஜியோனிஸ யூதவெறியர்களுக்கும், அவர்களின் மதப் போதகர்களுக்கும், அந்த யூத மதத்திற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்.

நம் இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்து ராஷ்ட்டிரத்தை அமைக்கப் போகிறோம் என்ற வெறிக்கூச்சலோடுதான் சங்பரிவாரங்கள் இந்திய முஸ்லிம்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். யூதவெறி ஜியோனிஸ மொசாத்தோடு கைகோர்த்துக் கொண்டு, 1921 முதல் இன்று வரை இந்துத்துவத் தீவிரவாதிகள் முஸ்லிம்களை கிராமம் கிராமமாக கொலை செய்கின்றனரே அது எதற்காக என்று இவர்களுக்கு விளங்காதா? எனவே முதலில் அந்த இந்து மதத்திற்கும், இந்துத்துவத் தீவிரவாதிகளுக்கும் என்ன தண்டணை கொடுக்கலாம் என்று இவர்கள் கூறட்டும். இவ்வாறு இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைப்பதற்காக பூண்டோடு அழிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் சிலவற்றின் பட்டியல் இதோ.