நெல்லை கிருத்துவ பள்ளியில் மாணவிகளை ஜட்டியுடன் ஆபாச நடனம் ஆட சொன்ன கிருத்துவ ஆசிரியன் கைது

04. ஆபாச டான்ஸ் ஆடச்சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்: வழக்கு

திருநெல்வேலி : மாணவிகளை ஆபாசமாக ஆடச்சொன்ன ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தை அடுத்துள்ளது கட்டளை கிராமம். இங்கு சி.எஸ்.ஐ.,கிறிஸ்தவ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அரசு உதவிபெறும் டி.டி.டி.ஏ.,துவக்கப்பள்ளி உள்ளது. இதன் தலைமையாசிரியராக பணியாற்றும் சாமுவேல்ஞானதுரை49 என்பவர் பள்ளிக்கு குடிபோதையில் வருவாராம். கடந்த 28ம் தேதி 5ம் வகுப்பு மாணவிகளை ஜட்டியுடன் நடனமாட கூறியுள்ளார். ஆசிரியரின் வற்புறுத்தலால் நடனமாடிய மாணவிகள் இதுகுறித்து பெற்றோர்களிடம் புகார் கூறினர். இந்த பிரச்னை குறித்து கல்விதுறை அதிகாரிகள் ராமர், கலைச்செல்வி ஆகியோர் மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் நடத்திய விசாரணையில் ஆசிரியரின் நடவடிக்கைகள் உண்மை என தெரியவந்தது. சீவலப்பேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆசிரியர் சாமுவேல்ஞானதுரை மீது 354பெண்களை மானப்பங்கப்படுத்துதல் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கல்விதுறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நன்றிங்க