இளம்பெண்ணிடம் சில்மிஷம் கிறிஸ்தவ போதகருக்கு வலை

திருநெல்வேலி : பிரார்த்தனைக்கு வந்த பெண்ணிடம், தகாத முறையில் நடந்த கிறிஸ்தவ போதகர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடக்கன்குளத்தில் விக்டரி ஏ.ஜி.சபை என்ற கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்த போதகர் ரைமண்ட் நியூட்டன் (50) நடத்தி வருகிறார். அந்தச் சபைக்கு அடங்கார்குளத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகள் பிரார்த்தனைக்காக வந்துள்ளார். அவர் தனியாக வந்திருந்தபோது அவரிடம் தகாத முறையில் நடக்க மதபோதகர் முயற்சித்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

நன்றி : தினமலர்