மீண்டும் ஒரு இந்து செக்ஸ் சாமியார் கைது!!


லக்னோ :முன்னாள் குற்றவாளியான ஒருவர், சாமியார் போர்வையில் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, டில்லி போலீசார் இந்த சாமியாரையும் விமான பணிப் பெண்கள் இரண்டு பேர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டம் சம்ருகா கிராமத்தை சேர்ந்தவர் சிவ முராத். டில்லியில் இவர் கடந்த 97ம் ஆண்டு மசாஜ் கிளப் நடத்தி வந்தார். அந்த கிளப்பில் விபசாரம் நடந்ததாக அப்போது கைது செய்யப்பட்டார். இதற்கிடையே திடீரென சுவாமி பீமானந்த மகராஜ் என்ற பெயரில் காவி உடை அணிந்து கோவில்களில் உபன்யாசம் செய்து வந்தார். இவரை பற்றி பத்திரிகைகளில் கட்டுரை வந்ததும், சீடர்கள் அதிகமானார்கள். இவர்கள் மூலம் பணமும் குவிந்தது.டில்லியின் தெற்கு பகுதியில் கான்பூர் என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து பிரபலமாகி வந்தார். டில்லி போலீசார் இந்த ஆசிரமத்தில் திடீர் சோதனை நடத்திய போது இரண்டு விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட ஆறு பெண்களுடன் போலி சாமியார் சிவ முராத் சல்லாபத்தில் ஈடுபட்டது தெரிந்தது. உடனடியாக அவரையும்,ஆறு பெண்களையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.


இதை கேள்விப்பட்ட சிவ முராத்தின் பெற்றோர், சகோதரர்கள் உ.பி.யில் உள்ள கிராமத்தை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். சம்ருகா கிராமத்தில் பெரிய கோவிலும், மருத்துவமனையும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு சாலையும் அமைக்கப்பட்டு வந்தது. சாமியார் கைதால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன.டில்லி போலீசார் இந்த கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சிவ முராத்தின் தந்தை பச்சாலால் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட ஐந்து வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் மீது கொலை வழக்கும், தம்பி மீது திருட்டு வழக்குகளும் உள்ளன.


இவர்கள் குடும்பத்தினர் அனைவரும் இரட்டை குழல் துப்பாக்கிகளை இதுநாள் வரை பயன்படுத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு லைசன்ஸ் கொடுத்தது தொடர்பாக உள்ளூர் போலீசாரிடம் டில்லி போலீசார் விசாரிக்கின்றனர்.அடுத்த மாதம் பெரிய யாகம் நடத்த திட்டமிட்டு வி.ஐ.பி.,க்கள் எல்லாம் அழைக்கப் பட்டுள்ளனர். இதற்கிடையே இவர் கைது செய்யப்பட்டதால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகி விட்டது.
நன்றி : தினமலர்