நாஸ்திக நண்பர்களே நாசத்தைத் தவிர்ப்பீர்


மூல ஆசிரியர் : அபூஅப்தில்லாஹ்,
தமிழ் அச்சு : இக்பால் மஸ்தான்

முன்னுரை

படைப்புகளிலேயே மிகச்சிறந்த படைப்பு மனிதப் படைப்பு. மனிதனுக்கு இந்த சிறப்பு கிடைக்கக் காரணமே அவனிடமுள்ள பகுத்தறிவாகும். மனிதன் தனக்குள்ள பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தினால் மனிதன் புனிதனாக உயர்ந்து விடுகிறான். பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தத் தவறும் மனிதன் தன்னைவிட தாழ்ந்த மற்ற படைப்புகள் அனைத்தை விடவும் மிக இழிவானதொரு நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான்.

உலகிற்குப் பயனற்ற மனிதன், மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே – பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தும் மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே – பிறப்பின் இலட்சியத்தை எய்துகிறான், இல்லை என்றால் அவனது பிறப்பு பயனற்றதாக மட்டுமல்ல, மீட்சியே இல்லாத நரக வேதனையைப் பெற்றுத் தருவதாக ஆகிவிடுகிறது.

பகுத்தறிவைக் கொண்டு சீர் பெற வேண்டிய மனிதன் அதே பகுத்தறிவைச் சுட்டிக் காட்டியே சீரழியும் நிலையை இன்று உலகெங்கும் பரவலாகக் காண்கிறோம். இதற்குக் காரணம் அவர்கள் கூறும் பகுத்தறிவு உண்மையில் பகுத்தறிவே அல்ல. புலன்களைக் கொண்டு பெறப்படும் ஒரு வகை அறிவாகும் அது. உண்மையான பகுத்தறிவை முறையாகப் பயன் படுத்தும் மனிதன் மனிதப் புனிதனாக உயர்ந்துவிடுவான். தன்னையும், தன்னைப் போன்ற மனிதப் படைப்பையும் மற்றும் படைப்புகள் அனைத்தயும் படைத்த ஒரே ஒரு இறைவன் இருக்கிறான், அவனுக்கு இணையோ, துணையோ, எவ்வித தேவையோ இல்லை என்பதை அந்த பகுத்தறிவைக் கொண்டே விளங்கிக் கொள்வான்.

தொடர்ச்சியாக வாசிக்க...................