Showing posts with label பைபிள் பாடம். Show all posts
Showing posts with label பைபிள் பாடம். Show all posts

சிறுமியை கற்பமாக்கிய தமிழக பாதிரியாருக்கு ஜாமீன் மறுப்பு

பாதிரியாருக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை : பள்ளி மாணவியை கற்பழித்த வழக்கில், பாதிரியாரை ஜாமீனில் விட சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எங்காலப்பட்டி சாவடியூரைச் சேர்ந்தவர் சுமத்ரா. ஒன்பதாவது வகுப்பு படிக்கிறார். கடந்த ஆண்டு மே மாத விடுமுறையின் போது பைபிள் போதனை பயிற்சி வகுப்புக்கு சென்றார். பயிற்சிக்கு வந்தவர்களை பாலக்கோடு அருகில் உள்ள அணைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். அப்போது கிருஷ்ணகிரி அருகில் உள்ள இலத்தகிரியைச் சேர்ந்த பாதிரியார் அமலநாதன் என்பவர் சுமத்ராவிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனால், கர்ப்பமடைந்த சுமத்ரா, தர்மபுரி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, கடந்த மாதம் அமலநாதன் கைது செய்யப்பட்டார்.தனக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில், அமலநாதன் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி சுதந்திரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நன்றி : தினமலர்

தொடர்புடைய பதிவுகள் :

1) 9ம் வகுப்பு மாணவியை பைபிள் பயிற்சி என கற்ப்பமாக்கிய கிருத்துவ பாதிரியார் கைது

2) பிஷப் அறிவிப்பால் சிறுமிகளை கற்பழிக்க தமிழக பாதிரிகள் ஆர்வம்

பாதிரியார் கற்பழித்த சிறுமிக்கு ஆண் குழந்தை

01. பாதிரியார் கற்பழித்த மாணவிக்கு ஆண் குழந்தை

பாலக்கோடு : பாதிரியாரால் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பாலக்கோடு எலங்காலப்பட்டி சாவடியூரைச் சேர்ந்த அமலநாதன் மகள் சுமத்ரா மேரி(16); பள்ளி மாணவி. கடந்தாண்டு மே மாதம் நடந்த பைபிள் போதனை வகுப்பில் பங்கேற்றார். எலத்தகிரி பாதிரியார் அமலநாதன் பயிற்சி முடிவில், மாணவ, மாணவியரை தும்பலஹள்ளி அணைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார். அங்கு, பாதிரியார் தன்னை கற்பழித்து விட்டதாக சமீபத்தில் சுமத்ராமேரி போலீசில் புகார் செய்தார். வழக்கில் பாதிரியார் அமலநாதன் கைது செய்யப்பட்டார். நிறைமாத கர்ப்பிணி சுமத்ரா மேரி, பிரசவத்துக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.

நன்றி : தினமலர்

தொடர்புடைய பதிவுகள் :

1) 9ம் வகுப்பு மாணவியை பைபிள் பயிற்சி என கற்ப்பமாக்கிய கிருத்துவ பாதிரியார் கைது

2) பிஷப் அறிவிப்பால் சிறுமிகளை கற்பழிக்க தமிழக பாதிரிகள் ஆர்வம்

பிஷப் அறிவிப்பால் சிறுமிகளை கற்பழிக்க தமிழக பாதிரிகள் ஆர்வம்

தர்மபுரியில் மறை மாவட்ட பிஷப் ஜோசப் அந்தோணி இருதயராஜ் நிருபர்களிடம் கூறுகையில்."உண்மையில் மாணவியை எங்கள் பாதிரியார் அமலநாதன் கற்பழித்து இருந்தால், அவருக்கு சிறுமி சுமத்ரா மேரியை திருமணம் நடத்தி வைப்போம். அவரை பொறுப்பில் இருந்தும் நீக்குவோம்,'' என்றார்..

சுவர் ஏறி குதித்து பாதிரியார் ஓட்டம்: தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

தர்மபுரி: கற்பழிப்பு புகாருக்கு ஆளான பாதிரியாரும், அவரை அழைத்து வந்த போலீசாரும், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சுவர் ஏறிக் குதித்து ஓடிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலக்கோடு அடுத்த எங்காலப்பட்டி சாவடியூரை சேர்ந்தவர் அமலநாதன். அவரது மகள் சுமத்ரா மேரி (16). பள்ளி மாணவி. பைபிள் போதனை வகுப்புக்கு சென்ற அவரை, கிருஷ்ணகிரி எலத்தகிரியை சேர்ந்த அமலநாதன் என்ற பாதிரியார் கற்பழித்து கர்ப்பிணியாக்கி விட்டார். அது தொடர்பாக சுமத்ரா மேரி கொடுத்த புகார், போலீஸ் விசாரணையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி பாதிரியாருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.நேற்று தர்மபுரி அரசு மருத்துவமனையில், பாதிரியார் அமலநாதனுக்கு ரத்தம், சிறுநீர், விந்தணு பரிசோதனை நடந்தது. பரிசோதனைக்கு வந்த பாதிரியாரை புகைப்படம் எடுக்க அரசு மருத்துவமனையில் பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். அவரை படம் எடுக்க விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் திசை திருப்பும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். வேறு வார்டில் பரிசோதனை நடப்பதாக கூறினர். பத்திரிகையாளர் அங்கு சென்ற நேரத்தில், போலீஸ் ஏட்டுகள் வெங்கடாசலம், சேகர் ஆகிய இருவரும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து பாதிரியார் அமலநாதனை அழைத்து கொண்டு, மருத்துவமனையின் காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்தனர். போலீசார் உட்பட மூவர் சுவர் ஏறிக் குதித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து வந்த கைதி போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து விட்டதாகவும் தகவல் பரவியது. சற்று நேரம் கழிந்த பிறகே, உண்மை நிலவரம் தெரியவந்தது.தர்மபுரியில் மறை மாவட்ட பிஷப் ஜோசப் அந்தோணி இருதயராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,""பாதிரியார் அமலநாதன் மீது சொல்லப்பட்ட புகார் உண்மையில்லை. நாங்கள் இது குறித்து விசாரித்தோம். சுமத்ரா மேரி கற்பழிப்புக்கு காரணமானவர் யார் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியும். வழக்கு விசாரணைக்கும், எந்த பரிசோதனைக்கும் பாதிரியார் அமலநாதன் தயாராக உள்ளார்.""உண்மையில் மாணவியை அவர் கற்பழித்து இருந்தால், அவருக்கு சுமத்ரா மேரியை திருமணம் நடத்தி வைப்போம். அவரை பொறுப்பில் இருந்தும் நீக்குவோம்,'' என்றார்.

நன்றி : தினமலர்

9ம் வகுப்பு மாணவியை பைபிள் பயிற்சி என கற்ப்பமாக்கிய கிருத்துவ பாதிரியார் கைது 1

01. பள்ளி மாணவி கற்பழிப்பு : பாதிரியாருக்கு 15 நாள் காவல்


தர்மபுரி: பள்ளி மாணவியை கற்பழித்து, கர்ப்பிணியாக்கிய பாதிரியார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரியைச் சேர்ந்த பாதிரியார் அமலநாதன்(28). இவர், கடந்தாண்டு மே மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு, பைபிள் போதனை பயிற்சி அளித்தார்.

அதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எங்காலப்பட்டி சாவடியூரை சேர்ந்த அமலநாதன் மகள் சுமத்ரா மேரி (16) என்பவரும் ஒருவர். நல்லம்பள்ளி செயின்ட் தாமஸ் மகளிர் பள்ளி விடுதியில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்த சுமத்ரா மேரி, விடுமுறையில் வீட்டில் இருந்ததால், பைபிள் பயிற்சிக்கு சேர்ந்தார்.

பயிற்சி பெற்ற மாணவ, மாணவியரை, பாதிரியார் அமலநாதன், கடந்த மே 24ம் தேதி பாலக்கோடு தும்பலஹள்ளி அணைக்கு சுற்றுலா அழைத்து சென்றார். அங்கு சுமத்ரா மேரியை, பாதிரியார் அமலநாதன் கற்பழித்து விட்டார். "அதை வெளியில் சொல்லக்கூடாது' என மிரட்டி அனுப்பி விட்டார்.

பயந்து போன சுமத்ரா மேரி, தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லவில்லை. மீண்டும் பள்ளிக்கு சென்ற போது, கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த நிர்வாகம், அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.

தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் சுமத்ரா மேரி, கற்பழித்த பாதிரியாரை கைது செய்யக்கோரி தனது தாய் மதலைமேரியுடன் சென்று டி.எஸ்.பி., விஜயராகவனிடம் புகார் செய்தார்.

விசாரித்த தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், நம்ப வைத்தல் (417), கற்பழித்தல் (376), கொலை மிரட்டல் 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, பாதிரியாரை கைது செய்தனர். தர்மபுரி ஜே.எம்., முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியாரை, 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.

நன்றி : தினமலர்